சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்-வெடித்து சிதறும் எச்சரிக்கை..!

சென்னையில் உள்ள கோயில்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மிரட்டல் மின்னஞ்சலில், ‘சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடித்து சிதறும்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெங்களூரு போலீஸார், இதுகுறித்து தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Comments are closed.