சிவனொலி பாத மலை சென்று திரும்புகையில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ஊசி மலை பிரதேசத்தில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேளையில் நபர் ஒருவர்  கடும் சுகவீனம் உற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்   இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு மரணித்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.சிறிபால என்ற 73 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் அல்பியட்டிய பிரதேசத்தில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு நல்லதண்ணியிற்கு சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை (29) இன்று மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

Comments are closed.