இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் (29.02) நீலாவணையில்( கல்முனை) இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு வயது பாலகனே உயிரிழந்துள்ளார்
வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் , கேற் திறந்திருந்ததும் தற்செயலாக ரோட்டிற்கு ஓடி வந்துள்ளார் . அபோது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில்,
சிறுவனின் பிறந்த தினம் மார்ச் 21 ஆம் திகதி வரவுள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.