இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.