கிணற்றை எட்டி பார்த்த வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-பொம்மை போல் மிதந்த சிசுவின் சடலம்..!

வீட்டுத் தோட்டமொன்றின் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலமானது குருணாகல் – ரிதிகம – வெலகெதர பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே  மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மோட்டரை இயக்குவதற்கு முன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றை சோதனையிட சென்றுள்ளார்.

இதன்போது அவர் கிணற்றில் பொம்மை ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில் குச்சியொன்றின் ஊடாக பொம்மையை அகற்ற முயன்ற போது அது பொம்மை அல்ல சிசுவின் சடலம் என அடையாளம் கண்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிசுவின் சடலம்  குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments are closed.