கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!

பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ  பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார்.

பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று  இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.