காணிப் பிரச்சினையை தீர்த்து வைத்த தௌபீக் எம்.பி..!{படங்கள்}

கிண்ணியா சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானத்திற்கான காணி உரியமுறையில் அடையாளம் காணப்பட்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யினால் ஞாயிற்றுக்கிழமை  (3) பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கட்டது.

 

இக் காணிப்பிரச்சினையானது சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நீண்ட இழுபறியில் இருந்துவந்த நிலையின், அண்மையில் அம் மைதானத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அப்பிரச்சினையை தீர்த்துதருவதாக வாக்குறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG 20240304 WA0003 IMG 20240304 WA0004 IMG 20240304 WA0005 IMG 20240304 WA0006

Comments are closed.