இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹல்ல பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கடுகஸ்தோட்ட – கஹல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.