காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலை

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர்,

மேலும் மக்கள் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் பாதுகாப்பற்ற தண்ணீரைக் கொண்டுள்ளனர்” என்று ஆக்ஷன் எய்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரஃபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது ” பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துளளது. ஆக்‌ஷன் எய்ட் பாலஸ்தீனத்தின் சட்டத்தரணி மற்றும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ரிஹாம் ஜாஃபாரி கூறுகையில், ரஃபாவில் தரைவழிப் படையெடுப்பு மற்றும் அப்பகுதியில் அதிகரித்த வான்வழித் தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளால் தொண்டு நிறுவனம் “ஆழ்ந்த கவலையில் உள்ளது” என்றார்.

“நாம் முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும்: 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபாவில் எந்தவொரு விரோதமும் தீவிரமடைந்தால் அது முற்றிலும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.