கள்ளத் தேங்காய் பறித்தவருக்கு 5000 ரூபாய் தண்டம்-கட்டத் தவறியதால் 3 வருடம் சிறை..!

5 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்த தவறியதால் 3 வருட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவிக்க களுத்துறை சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த எம்.எச். வசந்த என்ற நபராவார்.

இவர் வெளிநாட்டவர்களது காணியில் சட்டவிரோதமாக 20 தேங்காய்களை பறித்தாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இவர் குறித்த அபராதத்தை செலுத்த தவறியதால் 3 வருட காலம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.