இலங்கை மக்களின் பரிதாப நிலை-வெளியான சோகமான தகவல்..!

நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தங்களிடமுள்ள ஆபரணங்களை அடகு வைத்தேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த மக்கள் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா மிரிஸ்ஸவத்த பகுதி தேவாலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்ள முடியாது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்

வாழ்வதற்கு போதியளவு சம்பளம் அல்லது வருமானம் கிடைக்காத காரணத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments are closed.