அவுஸ்திரேலிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி

மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில் குறித்த அவுஸ்திரேலியா பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் கடுகண்ணாவை என்னும் பிரதேசத்தில் இயங்கும் மசாஜ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (09) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும். அதன் பின்னர் கடுகண்ணாவை பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்ப்பாட்டினை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலியா பிரஜையான 39 வயதுடைய பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள பெண் – எனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா நிமிர்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தோம் அதிகமான சுற்றுலா இடங்களை பார்வையிட்டு கடந்த 9ஆம் திகதி கடுகண்ணாவை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தாகவும் அதே நாள் மாலை குறித்த ஹோட்டலில் உடலுக்கு மசாஜ் செய்துக்கொள்ள மசாஜ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றிருந்தாகவும் கூறியுள்ளார்.
பெண் தலை மற்றும் தோல்பட்டை போன்ற பகுதிகளுக்கு மசாஜ் செய்துகொள்ள சென்றிருந்த நிலையில்
அங்கு தனது உடலை மசாஜ் செய்யும் போர்வையில் மசாஜ் செய்த ஊழியர் அந்தரங்க பகுதிகளை அவசியமின்றி தொட்டதன் காரணமாக தான் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் அதன் பின்னரே உடனடியாக அங்கிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்தோம் என அவுஸ்திரேலியா பெண் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா பொலிஸார் கண்டி கடுகண்ணாவை பொலிஸாருக்கு தெரிவித்து சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்

Comments are closed.