அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் பலர் கைது!

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும், போலியான அனுமதி பத்திரத்துடன் பயணித்த டிப்பர் ஒன்றும் தருமபுரம் பொலிசாரல் இவ்வாறு செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேச நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

IMG 20240319 WA0028

IMG 20240319 WA0029

IMG 20240319 WA0030

IMG 20240319 WA0031

IMG 20240319 WA0032

Comments are closed.