28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

Tik Tok ஊடாக பணம் பந்தயம் கட்டுவதற்காக கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற 6 இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

119 பொலிஸ் அவசர அழைப்பு நிலையம் மற்றும் பிலியந்தலை பொலிஸ் ஊடாக மாலை முதல் நள்ளிரவு வரை பெருமளவிலான முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வீதியில் அதிக சத்தம் எழுப்பி வருவதாக தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பத்து பொலிஸ் அதிகாரிகள் குழு அங்கு சென்று குறித்த இளைஞர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்யும் பக்தர்கள்.

sumi

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு

User1

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

User1

Leave a Comment