28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது மீட்கப்பட் (15) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ்சா காணப்பட்டதோடு, குறித்த கெப் ரக வாகனத்தையும் விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்வத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

User1

8 ஆண்டுகளின் பின் இங்கிலாந்து மண்ணில் இன்று களமிறங்கும் இலங்கை டெஸ்ட் அணி

User1

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் கடமையில்!

User1

Leave a Comment