28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களை தமக்கு நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு சரியான நேரத்தில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

90 நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து 100 மீட்டருக்குள் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம்

sumi

Ante Milicic, Josep Gombau in line for Western Sydney Wanderers’ job

Thinakaran

யாழில் பொலிஸாரிற்கு டிமிக்கி கொடுத்து பறந்த இளைஞர்களிற்கு நேர்ந்த கதி

sumi

Leave a Comment