28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் புதிதாக நியமனம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா வியாழக்கிழமை உடன் அமுலுக்கு வரும் வகையில், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிலையில் மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புல்மோட்டை பகுதியில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலையே நீதி சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

User1

கோர விபத்து :2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலி !

User1

சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு ? அறிவிப்பு வெளியானது !

User1

Leave a Comment