28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கு இன்றே கடைசி சந்தர்ப்பம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4, 5, 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு இனி சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, தபால் மூலம் வாக்களிக்கத்தகுதி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்கை செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

sumi

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

sumi

A/L பரீட்சை விடைத்தாள் திருத்த விண்ணப்பம் கோரல் !

User1

Leave a Comment