27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவரை காணவில்லை!

மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று புதன்கிழமை (04) அதிகாலை இரண்டு இளைஞர்கள்  கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.

நாகராசா பகீரதன் என்ற 21 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

User1

வடமராட்சி கடற்கரையில் பரபரப்பு!

sumi

தமிழரசுக் கட்சியின் பெரும்பாலோனோர் பொதுவேட்பாளருக்கே ஆதரவு !

User1

Leave a Comment