28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண் மரணம்

யாழ்.வடமராட்சிக்கிழக்கு செம்பியன்பற்று தெற்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த  சம்பவம் நேற்று(1) காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், வடமராட்சிக்கிழக்கு நெல்லியானிலுள்ள யூதாதேயு ஆலய திருநாள் திருப்பலியானது காலை வேளையில் நிறைவடைந்த நிலையில்

குறித்த நிகழ்வினை முடித்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தார்

இதன்போது, அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றிருந்த போதும் அங்கிருந்து உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றிக் கொண்டுசெல்லப்பட்டார். 

அதன்பின் அங்கு  சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மாலை மூன்று மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாமலுக்கு பதில் பிரேம்நாத் சி. தொலவத்த நியமனம் !

User1

வெளிநாட்டு துப்பாக்கி, கோடாவுடன் இளைஞன் கைது

User1

சஜீத் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு இருப்பதால் நாமும் ஆதரவளித்தோம்_மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் எம்.பி

User1

Leave a Comment