27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஏட்டிக்குபோட்டியாக வவுனியாவில் பலத்தை காட்டிய அரசியல்வாதிகள்!

ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரண்டு பேரணிகள் (01.09) இடம்பெற்றிருந்தது.

அந்தவகையில், குருமன்காட்டில் இருந்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே. காதர் மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.

சமநேரத்தில், வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  கு. திலீபன் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றடைந்தனர்.

இரு பேரணியிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பேரணியால் வவுனியா – மன்னார் வீதி மற்றும் நகரப் பகுதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்ப்பட்டிருந்தது.

Related posts

வீதி விபத்தில் யுவதி பலி

User1

உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் !

User1

கடத்தல்காரருடன் கள்ள உறவில் இருந்த அழகியை தட்டி தூக்கிய பொலிசார்..!

sumi

Leave a Comment