27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அம்பலாங்கொடையில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் பலி

அம்பலாங்கொடை – படபொல வீதியில் பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதி  வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

படபொலவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபப் பெண்   ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாதென சஜித் பிரேமதாச கருத்து

User1

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

sumi

நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

User1

Leave a Comment