27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொன்வெல்ல வனப்பகுதியில் நேற்று (28) பிற்பகல் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு முழுவதும் குறித்த வனப்பகுதியில் தீ வேகமாகப் பரவியுள்ளதால் பத்து ஏக்கருக்கும் அதிகமான  நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  

கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது யாரேனும் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று (29) காலை குறித்த வனப்பகுதியில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் பரிசுபொருட்கள் வாங்க முண்டியடிக்கும் இளசுகள்..! {படங்கள்}

sumi

யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}

sumi

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம்: மாவை சேனாதிராஜா

User1

Leave a Comment