27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைகளுக்கு தீவைப்பு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு  முன்னால் காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனைகளுக்கு 21.08.2024 இன்று தீவைக்கப்பட்டுள்ளது

மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது 

சம்பவம் தொடர்பாக எமது பிரதேச செய்தியாளர் இராணுவ அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது,

மூன்றாவது முறையாகவும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தீ மூட்டப்பட்ட பகுதியில் இராணுவத்தால் நிறுவப்பட்ட சிறுவர் பூங்கா காணப்படுவதால் அதை இலக்குவைத்து விஷமிகள் தீ மூட்டியிருக்கலாமென சந்தேகிப்பதாக தெரிவித்த அவர் தமது இராணுவ புலனாய்வுத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கில்மிஷா,அசானி இருவரும் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

sumi

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் பலி!!

User1

இலங்கை பெண்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு !

User1

Leave a Comment