27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம்

இலங்கை (Sri Lanka) மின்சார சபை இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற 20.65 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 34.53 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 67.2 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மின்சார சபையின் நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் (Sri lanka) மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை

User1

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

User1

காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

User1

Leave a Comment