27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கேகாலையில் கோர விபத்து: 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை – மொலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டி, புரிமத்தலாவ தந்துரே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குழுவினர் மற்றும் கொழும்பு களனி பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பேர் உட்பட 7 பேர் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

User1

குரஜாத் முதல்வரைச் சந்தித்தார் அனுரகுமார

sumi

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்

User1

Leave a Comment