28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!

கல்முனை நோக்கி பயணித்த நபர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே மரணித்துள்ளார். இவ்விபத்து இன்று (14) காலை 7 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் றமீஸ் என்று அழைக்கப்படும் நபர் ஆவார்.

இவர் வயல் வேலை செய்வதற்கான  நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முதன்முறையாகப்ஜேவிபி தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா.!

sumi

கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிவிட்டு கம்பி நீட்டிய தரகர்!

User1

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

User1

Leave a Comment