• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

admin by admin
August 13, 2024
in உலக செய்திகள்
0
பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆனால், இதனையடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் அவர் சந்தித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பாலசூரிய (Chanaka Balasuriya)  கடை ஒன்றை நடத்திவருகிறார்.

ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற, சிறிது நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

தன் கடைக்கு அருகிலுள்ள மசூதி ஒன்றின் முன் போராட்டக்காரர்கள் கூடியுள்ளதை அறிந்த பாலசூரிய, தன் கையடக்க தொலைபேசி மூலம், தன் கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளார்.

அப்போது, அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளது. கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.

ஆனால், அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்வதையும், கடையை பழுது பார்ப்பதையும் கண்டு பாலசூரிய திகைத்து நின்றிருக்கிறார்.

அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளதாகவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.

கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்கமுடிந்திருக்கிறது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது என அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு நம்பமுடியாத அளவில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.

Related Posts

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு!

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு!

by selvan
June 25, 2026
0

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் இடைக்கால...

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

ஆண்டி பர்ன்ஹாம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்களால் சர்ச்சை!

by selvan
June 25, 2026
0

நேட்டோ (NATO) பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமான கருத்துக்களை...

மெட்டவின் புதிய AI தொழில்நுட்பக்  கண்ணாடி அறிமுகம்!

மெட்டவின் புதிய AI தொழில்நுட்பக்  கண்ணாடி அறிமுகம்!

by selvan
June 25, 2026
0

சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி,...

கட்டார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை விரைவில் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும்!

by selvan
June 25, 2026
0

எதிர் வரும் வாரங்களில் கட்டார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்....

வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம்!

வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம்!

by selvan
June 25, 2026
0

வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...

ஈரான் அளித்துள்ள தகவல்கள் பொய்யாக இருந்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வரும் – டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் அளித்துள்ள தகவல்கள் பொய்யாக இருந்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வரும் – டிரம்ப் எச்சரிக்கை!

by selvan
June 25, 2026
0

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் எந்தவிதமான கட்டணங்களையோ, காப்பீட்டு செலவுகளையோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையோ கோரவோ அல்லது பெறவோ இல்லை என்று ஈரான் தன்னிடம்...

‘ட்ரில்லியனர்’ அந்தஸ்த்தை இழந்தார் எலோன் மஸ்க்!

by selvan
June 25, 2026
0

உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர்  எலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை இழந்துள்ளார்.அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின்...

வெனிசுலாவில் 7.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வெனிசுலாவில் 7.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 25, 2026
0

வெனிசுலாவின் கடற்கரையோரப் பகுதியில் 7.1 மெக்னிடியூட் வலுவளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் தலைநகரான கராகஸ் (Caracas)...

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தனிந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டொலர்...

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

by selvan
June 24, 2026
0

ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி