28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிசாரினால் கைது

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லீம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பிரபல பிக்கு..!

sumi

டயானா கமகேவை பிணையில் விடுவிக்க மன்றம் உத்தரவு !

User1

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

sumi

Leave a Comment