27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அலி சப்ரிக்கு மற்றொரு முக்கிய அமைச்சுப் பதவி

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு சற்றுமுன்னர் (12.8.2025) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு, நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுப் பதவியானது மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பதவி விலகியதை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொன்சேகா இராஜினாமா!

User1

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

sumi

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு ..!

User1

Leave a Comment