28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் பணத்தினை மோசடி செய்தவரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் செலாவதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டார்.

மீண்டும் இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு பணத்தினை கொடுத்து ஏமாந்தவரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

கிழக்கில் தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம்தெரியாமல் அழிந்துபோகும் ஆபத்து : நா.உ.எஸ்.கஜேந்திரன்

User1

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு

sumi

தமிழ்த் தரப்பினாிடம் அபிவிருத்தி குறித்து தீா்வுகள் இல்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Nila

Leave a Comment