28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

மலையகத்தில் மற்றுமொரு சோகம்-ஒருவர் பலி..!

நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று(15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

எண்ணெய்க் குழாய் திட்டம் குறித்து கலந்துரையாடல்.!

sumi

விரைவில் கூடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை

User1

அன்புக்குரிய முஸ்லிம் வாக்காளர்களுக்கு சஜித் பிரேமதாசாவின் திறந்த மடல்!

User1