28.2 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

மின் ஒழுக்கால் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் இன்றைய தினம் 07.02.2024மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக 35 லட்சத்துக்கு மேற்பட்ட தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர்பெளசர் மூலம்  அயலவர்களின் உதவியோடு  உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 
1000372719
இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிர்க்கதியாக நிற்பதாகவ தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
1000372744
மின் இணைப்பு வயரில் சேதாரம் ஏற்பட்ட நிலையில் அதனை இரண்டு தடவைகள் மின்சார சபையினர் வந்து அறுந்த வயறை முடிந்தே சென்றனர் அப்பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே தும்புத் தொழிற்சாலை முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக   கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
1000372736

1000372738

Related posts

யாழில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்..! {படங்கள்}

sumi

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

User1

திருமலை கின்னியா பகுதியில் வரவுள்ள பாரிய மாற்றம்..!

sumi