28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி

சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி வழங்கியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30.01.2024) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி

Related posts

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைத்த நபர்கள்

User1

மலையகத்தில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

sumi

சாந்தனின் உடல்நல குறைவு விதியின் தண்டனை: நீதி வென்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர் உற்சாக பகிர்வு!

sumi

Leave a Comment