மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பாதை யாத்திரை இன்று 04 ம் திகதி திரு.செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி சாமி மலை, மஸ்கெலியா பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்ட யாத்திரிகர்கள் கொண்ட குழு இன்று மாலை 3.30 மணிக்கு கதிர்காம பாதயாத்திரை ஆரம்பித்தனர்.
இவர்கள் இன்று கொட்டும் மழையிலும் நடை பயணமாக நோர்வூட் டிக்கோயா நகரை அடைந்து அங்கு உள்ள அம்மன் ஆலயத்தில் தங்கி நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிக்க உள்ளதாகவும் நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து ரதல்ல வரை செல்கின்றனர்.
ரதல்ல ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலையில் மீண்டும் யாத்திரை ஆரம்பித்து பொரகஸ் ஆலயம் வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து வெளிமடை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்குவர்.
மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து டயரபா வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் கும்பல் வளை வரை சென்று அங்கு உள்ள காளி கோயில்களில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பார்கள்.
பின்னர் வெள்ளவாய வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை எத்தில் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.
பின்னர் குடாவெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து லுனுகம் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை கதிர்காமம் சென்றடைவார்கள் என யாத்திரை குழு தலைவர் திரு.செல்வகுமார் தொரிவித்தார்.










