அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ (Federal Reserve) வங்கியின் ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5-4 என்ற வாக்கு வித்தியாசத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் பணி நீக்க முயற்சியை உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
இதன்படி, லிசா குக் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.
சட்டப்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்வதற்கு முன் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
எனினும், லிசா குக் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முன்னதாகத் தகுந்த வாய்ப்பை தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுபவர்கள் அல்ல என்றும், அவர்கள் 14 ஆண்டு கால பதவிக்காலத்தைக் கொண்டவர்கள் என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், லிசா குக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அல்லது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.










