மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அப் பகுதியில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகளுக்கும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுட்ட போது மரணித்த நிலையில் காண படுபவர் ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த 43 வயது உடைய திருமணமான மூன்று குழந்தைகளின் தந்தையான ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில் மனைவி வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் ஹட்டன் தடைய வியல் பொலிசார் வந்து தடயங்களை சேகரித்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்










