உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்; பெண்கள், முதியவர்கள் உட்பட 14 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் அனுமதி இன்றி மணல் ஏற்றியவரைக் கைது செய்த விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், குடும்பப் பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் முதியவர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உமையாள்புரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது என்று விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்துடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அதிரடிப் படையினர் கொண்டு செல்ல விடாது தடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த முறுகல் நிலைமை பின்னர் இருதரப்பு மோதலாக மாறியது.

இதனையடுத்தே, அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சம்பவ இடத்தில் இருந்த பாடசாலை மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 14 பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0