• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

selvan by selvan
June 17, 2026
in இலங்கை செய்திகள்.
0
முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  ஆகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும், தண்ணிமுறிப்புக் கிராமமும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் ஏ.சி.பாம் கிராமமும் இதுவரைமில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்த கிராமங்கள் தமிழ்மக்களின் பூர்வீக கிராமங்களாகும். கடந்தகாலத்தில் இக்கிராமங்களில் எமது தமிழ் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

அங்கு அந்த மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போதும் காணப்படுகின்றன.

எனவே அந்த மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,

நாம் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனினும் அந்தக் கிராமங்களில் எவரும் மீள்குடியேறுவதற்குத் தயாராக இல்லை.

அங்கு மீள்குடியேறுவதற்கு தமது பெயர் விபரங்களைத் தருவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்துளம் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தயாராக உள்ளவர்களின் பெயர்விபரங்களை தாங்களாவது பெற்றுத்தருவீர்களெனில் அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களிடம் யாரும் பெயர்விபரங்களைத் தரவில்லை எனக் கூறவேண்டாம். இதற்கு முன்பு இருந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடம் அந்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.

அதேபோல் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றம்செய்யுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மீள்குடியேறத் தயாராக உள்ள மக்களின் பெயர்விபரங்களும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.

எனவே அந்துமக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுறுத்தியதையடுத்து, இந்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் மீள்குடியேற்றம்தொடர்பாக விசேட கூட்டமொன்றை ஒழுங்குசெய்யுமாறு இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஏ.சி.பாம் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கவனஞ்செலுத்தவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

Related Posts

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

by selvan
June 17, 2026
0

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு...

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

by selvan
June 17, 2026
0

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

by selvan
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும்...

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

by selvan
June 17, 2026
0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக...

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

by selvan
June 17, 2026
0

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.இன்று...

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

by Mathavi
June 17, 2026
0

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது. ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த...

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 17, 2026
0

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!

by Mathavi
June 17, 2026
0

புதிய அரசமைப்பு என்ற பெயரில் 'ஏக்கிய ராஜ்ஜிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும்,...

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!

by Mathavi
June 17, 2026
0

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக "சிறு குற்றங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி