உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விபரங்களைச் சமர்ப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் புலனாய்வு விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுரேஷ் சலே தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குறித்த நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதன்போது நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், இந்த நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விபரங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தச் சம்பவத்தின் மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேயின் தற்போதைய நிலையை நேரில் சென்று கண்காணிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

27 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0