• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அண்டை நாடுகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரம்!

selvan by selvan
June 2, 2026
in உலக செய்திகள்
0
அண்டை நாடுகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரம்!
Share on FacebookShare on Twitter

சர்வதேச அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளன.

காசா துறைமுகத்தில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க சிற்றுண்டிச்சாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், லெபனானின் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த மூலோபாய மலைப்பகுதியை இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த அக்டோபர் மாதம் எட்டப்பட்ட “போர்நிறுத்த” ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காசா துறைமுகப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சிற்றுண்டிச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

பொது விடுமுறை தினத்தை முன்னிட்டு, கடுமையான கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காகப் பொதுமக்கள் பலர் அங்கே குழுமியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் லெபனான் மீதான தனது தரைவழி ஆக்கிரமிப்பையும் வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமைதி உடன்படிக்கையிலும் லெபனான் போர்நிறுத்தத்திற்கான உத்தரவாதம் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

லெபனானுக்குள் தனது இராணுவத்தை இன்னும் ஆழமாக முன்னோக்கி நகர்த்துமாறு இஸ்ரேலிய பிரதமர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, லெபனான் எல்லையில் இஸ்ரேல் பெரும் முன்னேற்றமடைந்துள்ளது.

தெற்கு லெபனானில் இடைக்காலக் கோட்டை ஒன்று அமைந்துள்ள மிக முக்கியமான மூலோபாய மலைக்குன்றை இஸ்ரேலிய இராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது.

இந்த உயரமான மலைக்குன்றிலிருந்து பார்த்தால் தெற்கு லெபனான் எல்லை முழுவதும் தெளிவாகத் தெரிவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த தளமாகக் கருதப்படும் தெற்கு நகரமான நபடியே (Nabatieh) பகுதி வரை கண்காணிக்கும் சாதகமான சூழ்நிலை இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளது.

தெற்கு லெபனானை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியப் படைகள் மற்றும் வடக்கு இஸ்ரேல் எல்லைக்குள் இருக்கும் இராணுவ முகாம்களைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் (Armed Drones) மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தில் இஸ்ரேலியப் படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், இஸ்ரேல் அரசு தன் நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இதற்குப் பதிலடியாகவே, லெபனானுக்குள் ஊடுருவி நிலப்பரப்புகளைக் கைப்பற்ற இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவத் தலைமை முயற்சித்து வருகிறது.

Related Posts

இங்கிலாந்தில் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை !

இங்கிலாந்தில் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை !

by selvan
June 2, 2026
0

பகைமை நாடுகளின் ஆளில்லா விமான தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப்...

மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை

மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை

by selvan
June 2, 2026
0

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது. குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின்...

உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!

உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!

by selvan
June 2, 2026
0

உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்...

வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை!

வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை!

by selvan
June 2, 2026
0

வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்ய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. உக்ரைனின் தொடர்ச்சியான வான்வளி தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதன்...

அமெரிக்காவில் குடும்ப வன்முறை – 7 பேர் பலி!

அமெரிக்காவில் குடும்ப வன்முறை – 7 பேர் பலி!

by selvan
June 2, 2026
0

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து...

போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் “அதிவேகமாக” தொடர்கின்றன.

by selvan
June 2, 2026
0

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் "அதிவேகமாக" தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவின் மூலமாக வெளியாகியுள்ள இந்த கருத்துக்கள்,...

இங்கிலாந்தில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

by selvan
June 1, 2026
0

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...

ஈரானுடனான உடன்படிக்கையில் நிபந்தனைகளை கடுமையாக்கினார் ட்ரம்ப்!

ஈரானுடனான உடன்படிக்கையில் நிபந்தனைகளை கடுமையாக்கினார் ட்ரம்ப்!

by selvan
June 1, 2026
0

ஈரான் நாட்டுடன் ஒரு "மிகச் சிறந்த" உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இந்த உடன்படிக்கையை அவசரமாக செய்து...

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய விழாவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி ரத்து!

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய விழாவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி ரத்து!

by selvan
June 1, 2026
0

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய தினத்தை முன்னட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 250ஆவது தேசிய தினத்தை...

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வெடித்தது கலவரம்!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வெடித்தது கலவரம்!

by selvan
June 1, 2026
0

சம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி