• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக ஒலிக்க வேண்டும்! – விஜய்க்கு கஜேந்திரகுமார் வாழ்த்து

Bharathy by Bharathy
May 7, 2026
in இலங்கை செய்திகள்
0
ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக ஒலிக்க வேண்டும்! – விஜய்க்கு கஜேந்திரகுமார் வாழ்த்து
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் தமிழக மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்துள்ளனர். குறிப்பாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் தமிழக உறவுகள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தேச அங்கீகாரத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது உரிமைப் போராட்டத்துக்குப் புதிய வலுவைத் தரும் என நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அரங்கிலும், இந்திய மத்திய அரசிடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்று எமது மக்களின் துயர்துடைக்க தமிழ்நாடு எவ்வாறெல்லாம் துணை நின்றதோ, அதேபோன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம்.

‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எமக்குண்டு.” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Posts

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டி- 2026!

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி- 2026!

by Bharathy
May 8, 2026
0

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின்...

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

by Bharathy
May 8, 2026
0

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய...

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு …!

by Bharathy
May 8, 2026
0

அக்கரையங்குளம் காவல் எல்லைக்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் காவல் நிலையத்தில் ஹலோ...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல்; விரைவில் தீர்வு காண நடவடிக்கை..!

by Bharathy
May 8, 2026
0

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் NPP யின் கரவெட்டி பிரதேச சபை...

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

by Bharathy
May 8, 2026
0

மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில...

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 8, 2026
0

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வியட்நாம்...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!

by Bharathy
May 8, 2026
0

பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகினர். அவரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

வடக்கில் தற்காலிக ஊழியர்களைநிரந்தரமாக்க ஆளுநர் உத்தரவு!

by Bharathy
May 8, 2026
0

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில்...

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

by Bharathy
May 8, 2026
0

அரியாலை செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணியின் 11வது நாளான இன்று மே 08 ஆம் திகதி 3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி