மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா,கண்டி,பதுளை மாவட்டத்தில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்தது வருகிறது.
இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒரு அடி உயரத்தில் கழிவு நீர் மழை நீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மாணவர்கள், பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், பேருந்து நிலையத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் மற்றும் நாவலப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்து நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வடிகால்களும் எதிர்கால சந்ததியினருக்கு இவ்வாறான நிலை இல்லாமல் முறையாக செப்பனிட்டு அந்த கழிவு நீர் கால்வாய் வழியாக மகாவலி கங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.











