வெட்டுக்காயத்திற்கு இலக்கான கிராம சேவையாளர் ஒருவர் மருத்துவமனையில்!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் பெண் கிராம சேவையாளர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10.04.2026 இன்று வீட்டில் இருந்த வேளைஇந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிராம சேவையாளரின் அண்ணன் மனநல சிகிச்சை பெற்று வருபவரே தனது சகோதரி மீது கத்தியால் வெட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை சட்ட நடவடிக்கையினை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்