இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டங்களை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
முன்னதாக, இவ்வகை சுற்றுலாத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்துக்கு கடிதம் வழங்கியிருந்தார். அந்தக் கடிதத்தை செல்லுபடியாகாதுஎன அறிவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இத்தகைய திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்ட விதிகளுக்கு முரணானவை என அவர்கள் வாதிட்டனர்.சுற்றுலா அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை என எடுத்துள்ள கொள்கை முடிவின் மூலம், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு தெளிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிகமாக பரிசீலனை செய்து வருகிறது.










