• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது.!

Mathavi by Mathavi
February 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதனை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய நல்லிணக்கப் பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு செல்லவுள்ளது.

இதன்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஜெனிவா செல்வதற்கு முன்னர் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

மறுபுறம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தால் வலியுறுத்தப்படும் மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசின் செயற்பாடுகள் உற்சாகமாக இல்லை. பெரும்பாலும் இந்தத் தேர்தலை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கவே அரசு ஆர்வம் காட்டி வருகின்றது.

தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்துக்குப் பல கடிதங்களை அனுப்பியுள்ளது என்றும், ஆனால் இதுவரை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ரீதியான தடைகள் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதி செயலகத்துக்குச் சுமார் நான்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் எதுவும் செய்ய முடியாது என்பதுடன், தேர்தல் குறித்த முடிவு தற்போது சட்டத் திருத்தங்களைச் சார்ந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கு அரச பிரதிநிதிகளை நியமிக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தனது நான்கு பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை நியமித்துள்ளது. இருப்பினும் அரசு இதுவரை தனது 12 பிரதிநிதிகளை பரிந்துரைக்கத் தவறியதால் தெரிவுக்குழு கூட முடியவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜெனிவாவில் அரசு தெளிவுபடுத்தவுள்ளது.

Related Posts

சிகிச்சைகள் பெறுவதை விட முன்கூட்டி தடுப்பதே வழி.!

சிகிச்சைகள் பெறுவதை விட முன்கூட்டி தடுப்பதே வழி.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டை அச்சுறுத்தி வரும் டெங்கு நோயிலிருந்து பொதுமக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு, அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் மருத்துவர் கபில...

ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!

ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இன்று (22) நண்பகல் சுமார் 12.30 மணியளவில் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற...

எந்தவொரு சமூகமும் தங்களை சிறுபான்மையினராக நினைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.!

எந்தவொரு சமூகமும் தங்களை சிறுபான்மையினராக நினைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்துக்காகவும் உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு சமூக ஒருமைப்பாடு அவசியமானது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி