1915
சிங்களவர் முஸ்லிம்கள் கலவரம்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
1928
துண்டுகளாக்கப்பட்ட வெதுப்பிகள் முதல்தடவையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தது.
1937
மார்க்கோ போலோ பாலச் சம்பவம் இரண்டாம் சீன – ஜப்பானியப் போர் ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.
1937
பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது.
1941
ஐஸ்லாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. பிரித்தானிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
1941
இரண்டாம் உலகப் போர்: பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் யூ-701 நீர்மூழ்கிக்கப்பல் அழிக்கப்பட்டது.
1953
சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.
1959
வெள்ளிக் கோள் ரேகுளுஸ் விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1978
சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1980
ஈரானில் இஸ்லாமியச் சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது.
1980
லெபனான் உள்நாட்டுப் போர்: 83 போராளிகள் கொல்லப்பட்டனர்.
1983
பனிப்போர்: சோவியத் தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் மாஸ்கோ சென்றார்.
1985
பொறிஸ் பெக்கர் விம்பிள்டன் கோப்பையை வென்ற இளம் டென்னிசு வீரர் (வயது 17) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1991
சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1997
ஈராக்கிய – குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியப் படைகள் வடக்கு ஈராக்கில் இருந்து வெளியேறின.
2003
நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி விண்ணுக்கு ஏவப்பட்டது.
2005
பிரித்தானியாவில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2007
புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2008
பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2008
காபூல் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2012
ரஷ்யாவின் கிராசுனதாரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழ்ந்தனர்.
2021
எயிட்டியின் ஜனாதிபதி சோவெனெல் மொயீசு இனந்தெரியாதோரினால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.















