• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 23, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தெற்கைப்போல வடகிழக்கு பிள்ளைகளும் சிறந்தகல்வியை பெறுவதை உறுதிப்படுத்துக!

Bharathy by Bharathy
March 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க!
Share on FacebookShare on Twitter

கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு எனக் குறிப்பிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவஅடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறும் பிரதமரும், கல்விஅமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை வன்னியில் பெருமளவான பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதியின்மை, அதிகளவான அதிபர், ஆசிரியர், பணியாளர்களின் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுதல் உள்ளிட்ட விடயங்களையும், தகவல் தொழில்நுட்ப கல்வியில் ஏனைய மாகாகாணங்களைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் இன்று (10.03.2025) இடம்பெற்ற, 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெவவுத்திட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள்தான் கல்வி அமைச்சுக்கும் பொறுப்பாக இருக்கின்றீர்கள். நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கின்றது.

அந்தவகையிலே கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் என்ற நோக்கிலே அரசின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடுகள் அமையப்பெற்றிருக்கிறது. தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமே கல்வி என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் இம்முறை இப்பாதீட்டிலே உள்ளடக்கப்பட்டமையை இந்த நேரத்தில் வரவேற்றுக்கொண்டு கல்விக்கான ஒதுக்கீடு தீவளாவிய வகையில் சமத்துவ அடிப்படையில் பகிரப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள் என்றே வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினராக நானும் கேட்டுக்கொள்கிறேன்.

பாடசாலை உட்கட்டுமான மேம்பாட்டுக்காக 10000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். போதுமானதற்ற கட்டடங்கள், கட்டிமுடிக்கப்படாத வகுப்பறைக் கட்டடங்கள், நூலகங்கள், ஆய்வுகூடங்கள் இன்றி வன்னிப்பிராந்தியப்பாடசாலைகள் இன்னமும் இருப்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். வன்னியில் வாழும் எங்கள் பிள்ளைகள், போதுமான ஆசிரியர்கள் இன்றி, இணைய வசதி இன்றி, முறையான வழிகாட்டல்கள் இன்றி பாடசாலை மட்டத்திலே மிகவும் இடர்படுகின்றார்கள்.

பாடசாலைகளில் நிலவும் இடைவிலகல்கள் இன்றளவும் வன்னிப்பிராந்தியத்தில் அபாயநிலையிலேயே காணப்படுவதை இப்பேரவையிலே முன்வைக்கிறேன்.

வன்னிமாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானவை ஊழியர் பற்றாக்குறை. வன்னி மாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களில் குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம், அழகியல் பாடங்கள், விசேட கல்வி, உயர்தர பௌதிகவியல், இணைந்த கணிதம், வணிகக்கல்விபாடங்களுக்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.1AB பாடசாலை தொடக்கம் வகை 2 பாடசாலை வரை உரிய பாட ஆசிரியர்கள் இன்மையால் நீங்கள் முன்மொழியும் தரமான கல்வியை எங்கள் மாணவர்கள் பெற இயலாதுள்ளனர். தரமான கல்வியைக்கொள்கையை எங்கள் வன்னியிலும் உறுதிப்படுத்துவீர்களா?

மிகவும் கடைசி நிலையில் STEM கல்வியில் உள்ள எங்கள் மாவட்டத்தின் முல்லைத்தீவின் ஆசிரிய ஆளணித் தேவைக்குக்கு உங்கள் வரவுசெலவுத்திட்டம் முன்னிரிமை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பல பாடசாலைகள் போதுமான அளவில் கல்வி சார், கல்விசாரா ஊழியர்கள் இல்லை. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மாத்திரம் 392 ஆளணி வெற்றிடங்கள். இவர்களில் 322 ஆசிரியர்கள். அதிபர் சேவைக்குரியோர் 23, காவலாளிகள் 20 பேர், பாடசாலைப்பணியாளர்கள் 12. விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழினுட்பம் உட்பட பத்து துறைகளுக்கு ஆசிரிய ஆலோசகர்கள் இல்லை. 14 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை. வவுனியா தெற்கு வலயத்தில் 29 காவலாளிகள், 10 பாடசாலை பணியாளர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்கள் உள்ளன. ஏனைய கல்வி வலயங்களிலும் இத்தேவைப்பாடுகள் உண்டு. பட்டதாரிகளை உள்ளீர்ப்பு செய்யும் வகையில் பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தரத்தீர்வு என்ன? கௌரவ கல்வி அமைச்சர் அவர்களே! நீங்கள் சொல்லும் தரமான கல்வி, சமத்துவமான கல்விக்கான வாய்ப்புகளை எங்கள் பிள்ளைகள் பெறுவதையும் உறுதிப்படுத்துங்கள். இதுவரை நாங்கள் பெறவில்லை என்பவற்றுக்கான சான்றுகளே இவை!

தகவல் தொழினுட்ப நிலைமாற்றத்திலும் ஏனைய 7 மாகாணங்களை விடவும் வடக்கும் கிழக்கும் பின்தங்கியே உள்ளது. கௌரவ கல்வி அமைச்சரே! இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் போதுமானதற்ற தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக்கல்வி நிலையங்கள் இல்லாத மாகாணங்கள் வடக்கும் கிழக்கும் தான். கிழக்கிலே 4 கல்வி வலயங்களிலும் வடக்கிலே 3 கல்வி வலயங்களிலும் தகவல் தொழினுட்ப வள நிலையங்கள் இல்லை. இந்தப்பாகுபாடு ஏன்? பாராளுமன்ற உறுப்பினராக நான் சார்பாகும் வன்னிமாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் இதுவரை அவ் வளநிலையங்கள் ஏன் இன்னமும் வழங்கப்படவில்லை. இங்குள்ள ஆசிரியர்கள் போதுமான பயிற்சியை பெறும் வசதிகள் அற்று காணப்படுகின்றனர். இங்குள்ள பெரும்பகுதி கணினிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இலத்திரனியல் கருவிகளை பதிவழிப்பதில் உள்ள இறுக்கமான நடைமுறையால் பல பாடசாலைகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல கணினிகள் இலத்திரனியல் குப்பைகளாக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

2024 இன் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலே 57% மேசைக்கணினிகள் பழுதடைந்து காணப்படுவதை இனங்காண முடிந்தது. வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 75% மேசைக்கணினிகள் பழுதடைந்துள்ளன. திருத்தப்படாதுள்ள கணினிகள் கிடப்பில் போடப்படும் போது சிறுபிழைகள் பெரும்பிழைகளாகின்றன. காவலாளிகள் இன்றிய சூழலில் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பழுதான கணினிகளின் பாகங்கள் களவு போகின்றன. இலத்திரனியல் கருவிகளின் திருத்தம் மற்றும் பதிவழித்தலில் உள்ள இறுக்கமான நடைமுறைகளால் நாடுமுழுதும் உள்ள பாடசாலைகள் இடர்களை எதிர்நோக்குகின்றனர். ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட பலரின் ஆய்வுகளும் இதற்குச்சான்று. கௌரவ கல்வி அமைச்சரே! இலத்திரனியல் கணினிகளை முகாமை செய்வதில் பொருத்தமான சாத்தியப்பாடான நடைமுறைகளை கொள்கை அளவில் ஏற்படுத்துங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

தொழினுட்ப நிலைமாற்றத்துக்கு மேலாக, வன்னியில் உள்ள பல பாடசாலைகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல வன்னிப்பாடசாலைகளில் முறையான சுகாதார வசதிகள் இல்லை. இது மாணவிகளைப் பாதிக்கிறது. பல பாடசாலைகைளில் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் இல்லை. STEM கல்விக்குத் தேவையான செயன்முறை பயிற்சிகளை எங்கள் மாணவர்கள் பெற இயலாதுள்ளார்கள். வன்னிப்பிராந்திப் பாடசாலைகளில் நூலக வலுவூட்டலும் தேவை.

தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே சான்றாக்குவோம்.

தாங்கள் அறிந்தது தான். கல்விக்கான முதலீடு செலவல்ல. அது சிறந்ததோர் எதிர்காலத்துக்கான முதலீடு – என்றார்.

Thinakaran
402 712.8K
  • Videos
  • Playlists
  • யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!
    யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்! 1 day ago
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 2 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 1 week ago
  • 389 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      சற்றுமுன் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது.!

      சற்றுமுன் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது.!

      by Mathavi
      May 23, 2025
      0

      முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை - ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து...

      கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு.!

      கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு.!

      by Mathavi
      May 23, 2025
      0

      கொழும்பின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள...

      புதிய கொவிட் 19 அபாயம்; சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

      புதிய கொவிட் 19 அபாயம்; சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

      by Mathavi
      May 23, 2025
      0

      இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய...

      காணாமல்போயுள்ள தாயைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.!

      காணாமல்போயுள்ள தாயைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      திருகோணமலை - வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் ஒருவர் 20.05.2025 அன்று காலை திருகோணமலைக்கு செல்வதாக பேருந்தில் சென்றுள்ள...

      வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிர்மாய்ப்பு.!

      வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிர்மாய்ப்பு.!

      by Mathavi
      May 23, 2025
      0

      பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்துள்ளார். மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரண்டு...

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      by Mathavi
      May 23, 2025
      0

      மேல், வடமேல் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

      பெருநில மோசடியில் ராஜபக்‌ஷ குடும்பம் ; பாயும் விசாரணை..!

      பெருநில மோசடியில் ராஜபக்‌ஷ குடும்பம் ; பாயும் விசாரணை..!

      by Thamil
      May 22, 2025
      0

      முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, தனது அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல் பிரபலம்..!

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல் பிரபலம்..!

      by Thamil
      May 22, 2025
      0

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு...

      துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு..!

      துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச் சூட்டுக்   காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது....

      Load More
      Next Post
      முகமாலை A9 வீதியில் சற்றுமுன் விபத்து!

      முகமாலை A9 வீதியில் சற்றுமுன் விபத்து!

      வெகுவிமரிசையாக இடம்பெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல்!

      வெகுவிமரிசையாக இடம்பெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல்!

      இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – நீதிமன்றத்தின் உத்தரவு!

      இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் - நீதிமன்றத்தின் உத்தரவு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி