பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு இருந்த முகாம் ஒன்றின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மார்ச் 31ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.