சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிசார் உந்துருளியில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இருவகையான 1600 போதை மாத்திரைகளை பொலிசார் கைப்பற்றினர்.
கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களை இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



